சின்னக் கலைவாணர் விவேக் அவருடைய நினைவு தினம் இன்று

‘சின்னக் கலைவாணர்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் அவர்களின் நினைவு தினம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், சமூக நலனில் ஆர்வம் கொண்ட மக்களுக்கும் உணர்ச்சிபூர்வமான நாள் ஆகும்.

நகைச்சுவை நடிகராக அறிமுகமான விவேக், தனது நையாண்டி கலந்த டயலோக்கள் மூலம் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர். ஆனால் அவர் சாதாரண நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல; சமூக சிந்தனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி முக்கியத்துவம், மதச்சார்பற்ற சிந்தனைகள் போன்றவை அவரது வசனங்களில் இடம் பெற்றன.

நினைவு தினம் – ஏப்பிரல் 17:

      2021 ஏப்பிரல் 17ஆம் தேதி அதிகாலை, 59வது வயதில் அவர் மாரடைப்பால் காலமானார். இதுதான் அவருடைய இறுதி நாள். அந்த நாளை அவரை நினைவுகூரும் நாளாக பலரும் கொண்டாடுகின்றனர்.

அவருடைய ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மரநடுகை விழாக்களை நடத்துகின்றனர். சில பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சமூக ஊடகங்களில் அவரது புகழுக்கு நீதிகொடுக்கும் விதமாக பதிவுகள் வைரலாகப் பகிரப்படுகின்றன. சில தொலைக்காட்சி சேனல்கள், அவரது புகழ்பெற்ற படங்களை, பேட்டிகளை ஒளிபரப்புகின்றன.

          விவேக், "Green Kalam" இயக்கத்தை தொடங்கினார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் கனவினை முன்னிறுத்தி, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் நட்டதை பெருமையாகச் சொல்லலாம். இது தான் அவருடைய சமூக பங்களிப்பை பிரதிபலிக்கும் மிகப்பெரிய உதாரணம்.
          விவேக் நினைவு தினம் என்பது, வெறும் ஒரு நடிகரின் மரணத்தை நினைவுகூரும் நாள் அல்ல.
அவருடைய சமூகப்பணிகள், சிந்தனைகள், நகைச்சுவையின் வழியாக கொண்டுவந்த கருத்துகள் ஆகிய அனைத்தையும் மீண்டும் நினைவுகூரும் நாள்.நாமும் அவரின் கனவுகளை செயல்படுத்த ஒரு மரம் நட்டு நினைவுகூரலாம்.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified