திடீர் திருப்பம்: அனுபவத்தைவிட இளைய வீரர்களுக்கு முக்கியத்துவம்! – CSK பயிற்சியாளர் பிளெமிங் உருக்கமான கருத்து



திடீர் திருப்பம்: அனுபவத்தைவிட இளைய வீரர்களுக்கு முக்கியத்துவம்! – CSK பயிற்சியாளர் பிளெமிங் உருக்கமான கருத்து

       தற்போதைய IPL சீசனில் Chennai Super Kings அணியின் கட்டமைப்பு குறித்து பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடையே  எழுந்துள்ளன. அணியின் நிரந்தர ஸ்டைலாக, கடந்த சில வருடங்களாக அனுபவம் வாய்ந்த வீரர்களையே நம்பிய CSK, இந்த முறைக்கு ஒரு புதிய மாற்றத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் இதுகுறித்து அளித்த பேட்டியில்,

            “கடந்த சீசன்களில் அனுபவ வீரர்களை கொண்டு வெல்வதே எங்கள் பாணியாக இருந்தது. ஆனால் அதற்கான ரிசல்ட் வராதபோது, அணியில் அனைவரையும் பரிசோதிப்பது அவசியம். அதனால் இம்முறை வழக்கத்தை விட அதிக வீரர்களை பயன்படுத்த உள்ளோம்”
என்று தெரிவித்தார். இந்த கருத்து CSK ரசிகர்களிடம் ஒரு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எப்போதும் தோனி மாஸ்டர் பிளான் என அனுபவத்தையே முக்கியத்துவம் கொடுத்த அணியில் இப்போது "புதிய முயற்சிகள்" என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.


           இந்த புதிய யோசனையின் பகுதியாக Baby ABD என அழைக்கப்படும் ஆயுஷ் மாத்ரே அணியில் இணைந்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட இளம் டெல்லி வீரர், குறுகிய காலத்திலேயே தனது அதிரடி பாட்டிங்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். T20 மோதல்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் அவர், CSK-வின் எதிர்காலம் எனவே ஏற்கனவே சிலரும் கருதி வருகின்றனர்.

           அணியில் Ruturaj, Dube, Jadeja போன்றவர்கள் தொடர்ந்து விளையாடும் நிலையில், இளம் வீரர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என பிளெமிங் கூறியிருக்கிறார். இது IPL போன்ற டைனமிக் டோர்னமெண்டில் ஒரு திறமையான அணிக்கட்டமைப்பை உருவாக்க உதவும்.பிளெமிங்  “பரிசோதனை வழியாக வெற்றி”என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது CSK-வின் மிக முக்கியமான மாற்றமாக பார்க்க படுகிறது. வழக்கமாக, அந்த நாள் தோல்வியுடன் கூட அடுத்த போட்டியில் ஒரே Playing XI-யை வைத்திருக்கும் CSK, இம்முறை “பரிசோதனை, பரிசீலனை” என்ற புதிய  வழிமுறையை கடைப்பிடிக்க உள்ளது. இது மற்ற அணிகளுக்கு எதிரான Gameplan-ஐ guess செய்ய முடியாமல் ஆக்கும் ஒரு சவாலாகும்.
பிளெமிங்கின் இந்த யோசனை வெற்றியடையும் என்ற நம்பிக்கையில், ரசிகர்கள் இப்போதைக்கு அமைதியாக காத்திருக்கின்றனர். ஆனால் இதுவே CSK-வின் எதிர்காலத்தை மாற்றும் முக்கிய கட்டமாக ஆகுமா என்பதை காலம்தான் பதிலளிக்க வேண்டும்.



இந்த பதிவைப் பிடித்திருந்தால், மேலும் இப்படி CSK மற்றும் IPL தொடர்பான அப்டேட்களுக்கு, எனது பிளாக் பக்கத்தை தொடர்ந்து படிக்கவும்: sathyask456.blogspot.com



Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified