இந்திய கிரிக்கெட் அணியின் முன்னண பந்து வீச்சாளரானா ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக எந்த திடரிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
காயம் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளியில் இருந்து திரும்பியுள்ள ஜஸ்பிரித் பும்ரா ஏப்ரல் 7 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டிக்கு முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
இருப்பினும், காயத்தில் இருந்து திரும்பிய காரணமாக அவர் நாளைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
2025 ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து பும்ரா வெளியேறினார்
ஜனவரி தொடக்கத்தில் தொடங்கி ஐந்து வாரங்களுக்கு அவரை ஓய்வில் இருக்குமாறு பி.சி.சி.ஐ மருத்துவக் குழு அவருக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளை பந்து கிரிக்கெட்டை உள்நாட்டில் பங்கேற்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இல்லை.
முதுகுவலியில் அறுவை சிகிச்சை செய்த பிறகு, பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ.யின் சிறப்பு மையத்திற்கு சென்றார். 31 வயதான அவர் தனது இறுதி சுற்று உடற்பயிற்சி சோதனைகளை நெருங்கியபோது படிப்படியாக தனது பந்துவீச்சு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு பி.சி.சி.ஐ.யின் மருத்துவ ஊழியர்களிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே அவர் மும்பை அணியில் சேர்ந்தார்.
இந்நிலையி்ல் ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராம் வீடியோவில் தனது வருகையை அறிவித்தது: "கர்ஜிக்க தயாராக உள்ளது என" அந்த வீடியோவில், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது மகன் அங்கத்திடம் “2013 ஆம் ஆண்டில், ஒரு குட்டி காட்டுக்குள் நுழைந்தது. ரன்கள், சிக்ஸர்கள், பவுண்டரிகள் நிறைந்த காடு. எல்லோரும் பயந்த இடத்தில், அவர் தைரியத்தைக் காட்டினார். பல ஆண்டுகளாக, அவர் பல போர்களை நடத்தினார். உயிர் வாழ்வதற்காகவும், பெருமைக்காகவும் போராடினார். அவர் வென்றார் மற்றும் தோற்றார், ஆனால் ஒருபோதும் கைவிடவில்லை. இந்த போர்கள் அவரை வடுக்களுடன் விட்டுச் சென்றன. ஒரு முறை குட்டி, இப்போது சிங்கம். சிங்கம் திரும்பி வந்துவிட்டது. அவர் மீண்டும் காட்டின் ராஜாவாக மாறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்
Comments
Post a Comment